Posts

Showing posts from June, 2021

Save the Cat - புத்தக வாசிப்பு பற்றி

Image
இந்த கட்டுரை புத்தகத்தில் இருக்கும் கருத்தின் தொகுப்பு.  என்னுடைய கருத்தை பதிவிடவில்லை.   Log Line: Log line மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி ஒன்றை சொல்ல முடியவில்லை என்றால் நிச்சயம் நம்முடைய கதை பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடியாது. அதனால் முதலில் log line ஐ எழுதிவிட்டு திரைக்கதையை எழுதுவது பயனுள்ளதாக இருக்கும் அல்லது log line திரைக்கதையை மேலும் செழுமைப்படுத்தும். அதனைப் பற்றிய சில முக்கிய கருத்துகள், 1. முரண்பாடுகள் கொண்டாதகவும் உணர்ச்சிகரமானதாகவும் இருக்க வேண்டும். அதைப் படித்தால் நமைச்சல் எடுத்தவன் எப்படி சொறிய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருப்பானோ அதைப் போல இருக்க வேண்டும் 2.அது ஒரு மன உருவகத்தை உருவாக்க வேண்டும். அதனுள் முழுப் படமும் இருக்க வேண்டும், முடிந்தால் காலவரை இருக்க வேண்டும். கேட்டவுடன் மனதை அது வருட வேண்டும். 3. பார்வையாளர்கள் மற்றும் பட்ஜெட்: இது என்ன வகையான பார்வையாளர்களுக்கு? என்ன வகையான படம்? படத்தின் பட்ஜெட் 4. தீவிரமான தலைப்பு. Log lineம் படத்தின் தலைப்பும் படத்தைப் பற்றிய முழு விவரங்களை, ஆர்வத்தையும் தூண்டுவதாக இருக்கிறது.  அனுபவத்தை உபயோகப்படுத்தி...

Stalker - பட காட்சிகளின் பகுப்பாய்வு

Image
 Stalker படத்தின் காட்சிகளை பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ளும் முயற்ச்சி. இதற்க்குப் பதிலாக இன்னோரு shot ஏன் வைக்க கூடாது என்று கேட்ப்பதைவிட, இது எந்த அளவிற்க்கு நமக்கு பதிப்பை ஏற்ப்படுத்தியிறுக்கிறது என்பது முக்கியம். இதனைக் கருத்தில் கொண்டு பகுப்பாய்வு செய்கிறேன். முதல் காட்சி  Shot: FS - Dolly IN லேசாக திறந்து இருக்கும் இரண்டு கதவுகளின் வழியே கட்டில் தெரிகிறது. சுவர்கள் எல்லாம் இருட்டில் இருக்க உள் அறையில் மட்டும் லேசான வெளிச்சம் இருக்கிறது. கேமிரா நகரும் போது நிச்சயம் நம்முடைய கவனம் அந்த சிறிய இடைவெளி வழியே தெரியும் அந்த காட்சியில் குவிக்கிறது. இது இயக்குனரின் மந்திரம் எனலாம். இடம் மற்றும் அதன் மக்களைக் காட்ட இது சிறந்த shot. இரண்டாம் காட்சி Shot: CU - Truck முதலில் டேபிளை Close up காட்டும் போது வீட்டின் பக்கத்தில் ரயில்வே லயன் இருப்பது கிளாஸ் ஆடுவதன் மூலம் காட்டப்படுகிறது. மெதுவாக Truck பண்ணி கட்டலில் படுத்து இருக்கும் ஒவ்வொருவராக காட்டப்படுகிறார்கள். எல்லோரும் முதலிக் தூங்குவது போல இருந்தாலும் Camera திரும்பவரும் போது ஒவ்வொருவராக கண் விழிக்கிறார்கள் காட்சி அந்த டேபிளில்...

கலை - ஒரு இலட்சியத்திற்கான ஏக்கம் -பகுதி 1

Image
 இது தர்கோவ்ஸ்கி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். (Sculpting in time - Book) கலையின் இறுதி நோக்கம் என்னவென்பதை வரையறுப்பது முக்கியமென நான் நினைக்கிறேன். சினிமா இயல்பின் கலை பற்றிய பிரச்சனையை பிறகு பார்ப்போம்.  கலை ஏன் இருக்கிறது? யாருக்கு இது தேவை? உண்மையிலே யாருக்கு இது தேவை? இந்த மாதிரியான கேள்விகள் கவிஞர்கள் மட்டுமில்லாமல் உண்மையிலேயே கலையைப் பாராட்டக்கூடியவர்களாலும் கேட்க்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் கலைக்கும் அதன் பார்வையாளனுக்கும் இடையே இருக்கும் உறவு என்பது நுகர்வோர் என்ற அளவிலே இருக்கிறது.  நிறைய பேர்வழிகள் தனக்குத்தானே இந்த கேள்விகளை கேட்டுக்கொள்கிறனர். ஏதோ ஒருவகையில் கலையுடன் தொடர்புடையவர்கள் அதற்க்கென தனக்கான பிரித்தியேக பதில்களை வைத்திருக்கின்றனர். அலெக்சாண்டர் பிளாக் இவ்வாறு சொல்கிறார், கவிஞன் குழப்பத்திலிருந்து நல்லிணக்கத்தை உருவாக்குகிறான். புஸ்கின் கவிஞர்களுக்கு தீர்க்கதரிசனத்தின் பரிசு இருந்தது என நம்புகிறார். ஒவ்வொரு கலைஞனும் தனது சொந்த சட்டங்களால் ஆளப்படுகிறான். ஆனால் இது வேறு யாருக்கும் கட்டாயமானது இல்லை.  எந்த ஒரு சந்தரப்பத்திலும் கலையின் குற...

shoeshine - மனிதனின் அவநம்பிக்கையும், நாகரிக சமூகத்தின் குற்றவாளிகளும் - Vittorio De Sica

Image
 1 ஒரு சமூகம் கைவிடப்பட்ட சிறுவர்களை எப்படி நடத்துகிறது? அவர்கள் கொலைகாரர்களாக, திருடர்களாக பின்னாலில் மாறும்போது அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதோடு நாம் ஆறுதல் அடைந்துகொள்கிறோம். கைவிடப்பட்ட சிறுவர்களை சமூக விரோதிகளாக மாற்றும் இந்த சமூகம் எந்தவிதமான தண்டனையையும் ஏற்றுக்கொள்வதில்லை.  சிறைதண்டனையை அனுபவிக்கும் அவர்களை நாம் என்ன விதமாக நடத்துகிறோம்? திருந்துவதற்க்கான வாய்ப்பா? இல்லை பழிக்குப் பழி வாங்கவா (ஒருவனை கொன்றுவிட்டான் என்பதற்க்காக அவனை தூக்கில் போட்டு அவனை கொன்றுவிடலாமா?) மனிதனின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத மனிதர்கள் குற்றச்செயலில் மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள். கோபம் கொண்டு இன்னொருவனைத் தாக்கும் நபர்களின் நோக்கம் அவர்களை காயப்படுத்துவதோ இல்லை கொன்றுவிடுவதோ இல்லை. ஆனால் அப்படித் தாக்கப்படுபவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் குற்றவாளி ஆகிறார்கள். நம்முடைய சட்டத்திற்க்கு அப்படி பிரித்துப்பார்த்து சொல்வதற்க்கு எந்தவித கருவிகளும் இல்லை. கொலைகாரர்களை கொலைகாரர்களாக மட்டும் பார்க்கும்.  2 குதிரை வாங்க ஆசைப்படும் இரண்டு சிறுவர்கள். ரோம் சாலையில் ஷுவை பாலிஸ் செய்யும் வே...

Bicycle thieves - பட காட்சி பகுப்பாய்வு

Image
 முதற்க்காட்சி Shot: MWS பசியால் வாடிய கூட்டம் வேலைக்காக அந்த அதிகாரியைப் பார்த்து நிற்க்கும், ஆனால் அதிகாரியோ இல்லாத ரிச்சியை அழைப்பார்.  இதனை ஏன் MWS ல் எடுக்க வேண்டும்? கூட்டத்தைக் காட்ட வேண்டும் அதே சமயம் அவர்களின் உணர்ச்சிகளையும் காட்ட வேண்டும். MS வைத்தால் கூட்டம் தெரியாது ஆனால் உணர்ச்சி தெரியும், WS வைத்தால் கூட்டம் தெரியும் உணர்ச்சி தெரியாது. இரண்டும் தெரிய வேண்டுமானால் சரியான shot MWS.  இரண்டாவது காட்சி Shot: EWS வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முன் நிற்க்கும் கூட்டம் சிரிதாக தெரியும் அளவு கட்டம் பெரிதாக இருக்கிறது. வேலைவாய்ப்பு அலுவலகம் அந்த கூட்டத்தைப் பொருத்தவரை அவ்வளவு பெரிதாக இருக்கிறது, ஏனெனில் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் அங்கு நின்றிருக்கிறது கூட்டம். அந்த கூட்டத்திலிருந்து ஓடிவருகிறான் என்பதை இப்படிக்காட்டினால்தான் மேலே சொன்ன விசயங்கள் தெரிவிக்க முடியும். Folow up shot வைத்திருந்தால், ஓடிவருபவன் கூட்டத்திலிருந்து விலகி செல்வது போல இருக்கும், கதையின் படி அவன் திரும்ப அங்கு சென்று சேர வேண்டும்.  மூன்றாவது காட்சி Shot: FS ஒரே காட்சியாக கட் செய்யாமல் E...

இருவர் - படத்தின் காட்சிகளின் பகுப்பாய்வு

Image
 முதல் காட்சி Shot: MCU சிறுவனை அணைத்துக்கொண்டு தாய் ஒருத்தி கண்களை மூடியவாறு ரயிலின் ஜன்னலோரம் அமர்ந்திருக்கிறாள். ரயில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்தகாலம் ரயிலுக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கிறது, அதனைப் பார்த்து லேசாக சிரித்தவாறு அந்த சிறுவன் இருக்கிறான். அவனது அம்மா அதனைப் பார்க்கவிரும்பாமல் தன் சோகங்களை மறைத்து கண்களை மூடிக்கொண்டிருக்கிறாள்.  இத னை ஏன் CU shot அல்லது MFS ல் எடுக்கவில்லை? ஒன்று :இருவரின் reaction ஐக் காட வேண்டும், மற்றது: அவர்கள் இரயில் பயணம் செய்வதைக் காட்ட வேண்டும். CU shots ல் reaction இருக்கும் ஆனால் ரயில் பயணத்தை இவ்வளவு சரியாகக் காட்ட முடியாது. MFS ல் ரயில் பயணம் இருக்கும் ஆனால் reactionஐ இவ்வளவு அழுத்தமாகக் காட்ட முடியாது.  தங்களின் கடந்தகாலத்தைவிட்டு புதுய உலகுக்கு அல்லது எதிர்காலத்துக்கு செல்வோரின் உணர்வு அங்கிருக்கிறது. அதை மிகச்சரியாக கடத்த இந்த shot உதவுகிறது.  இரண்டாம் காட்சி Shot: FS  - Dolly In படத்தயாரிப்பாளர் தனது காரினுள் ஏறப்போகும் போது மோகன்லாலும் அவரது தாத்தாவும் பின்னால் வந்து உதவி கேட்க்கின்றனர். இந்த காட்சியில் ஏன் ...